Sunday, June 14, 2015

மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் – பாகம் – 3

மந்திரங்களும் அதன் அனுஷ்டானங்களும் – பாகம் – 3


கடந்த இரண்டு பாகங்களில் மூன்று உலகங்களை பார்த்தோம் .. அதில் சொல் உலகம் பற்றி பார்த்தோம் ..

ஆயின் மந்திரங்களின் "மூலம்" பற்றியும் அவற்றின் பரம புருஷ உறவு பற்றிய சிறு குறிப்பு இன்று பார்ப்போம் ...

வார்த்தைகளே மந்திரங்களாக எப்படி பரிமளிக்க முடியும் ??? நாம் சிறுவர்களாக இருந்த போது ஓம் க்ரீம் என்றல்லாம் சொல்லி இருக்கோமே அதெல்லாம் பலிக்க வில்லையே ஏன்??

எல்லா வார்த்தைகள் மந்திரங்கள் ஆகா, வட மொழியில் வாக்கு (Vak) சப்தம் (Sabda) இரண்டிற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன .. சப்தம் என்பது .. நீங்கள் ஒரு எலெக்ட்ரானிக் உபகரணம் மூலம் கேட்கும் மந்திரமாக கூட இருக்கலாம் ... வாக்கு என்பது ஒரு மனித மனதினால் செலுத்தப்படுவதாக இருக்க வேண்டும் ...

அது மூன்று விதமாக சொல்லப்படுகிறது ..

1. பர-வாக்கு – இறைவனின் வாக்கு ... ஸ்ருஷ்டி – கல்பனா ..
2. சூக்ஷும – வாக்கு இந்த வார்த்தைகள் .. நமக்கும் தேவர்களுக்கும் இடைய புரியப்படும் வார்த்தைகள்
3. ஸ்துல – வாக்கு ... இது நம்மை போன்ற மனிதர்களின் மன ஆசைகளின் வெளிப்பாடு ( எல்லா வார்த்தைகளும் மனிதர்களின் மன ஆசை என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன !!- ஆசை துறந்தவன் பேசுவதில்லை !!)

காலம் பொருள் கடந்த இறைவன் இந்த உலகை படைத்ததே            பர- வாக்கினால்தான் ... (நமது சனாதன தர்மத்தின் கருத்துகளில் சிறு துளியை கண்டு .. பழைய பைபிள் கருத்துக்களை பாருங்கள் ..

The Hebrew word for Light is “Aur.” Genesis says, “God said: let there be Light (Aur) and there was Light (Aur).” The Divine word is conceived of in the Hebrew Scriptures as having creative power...



அது வார்த்தையோ அல்லது சப்தமோ இல்லை "ஈஸ்ச்வர த்’வணி"...

இந்த உலகம் “உருவாக்கப்பட்டதாக சொல்லக்கூடாது  என்று.. நமது சாத்திரங்களை அறிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள் ஏன் என்றால் அது ஸ்ருஷ்டி ..

 ஒரு வித பரிணாமம் ...ஏன் என்றால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னும் அதற்கும் முன்பும் பொருள் இருக்கவில்லை .. இந்த உலகத்தை பரமபுருஷன் தன்னில் இருந்து உருவாக்கவில்லை (காரணம் அவன் ஒரு பொருளால் ஆனவன்  இல்லை )

"ஈஸ்ச்வர த்’வணி":-
அதுவே பரம புருஷனில் இருந்து வந்த சப்த பிரமம்... அதுவே நாம் காணும் உலகம் தோன்ற காரணி .. இந்த சப்த பிரும்மத்தை பற்றி கிரேக தத்துவ ஞானி பிளாடோ இது  பரமபுருஷனுக்கும் இந்த உலகிற்கும் இடைப்பட்ட காரணியாக சொல்வதை பார்ப்போம்!!
அதை அவர்கள்
Logoi என்று அழைக்கிறார் ..

According to Plato, the Logoi were super sensual primal images or patterns (Jāti) of visible things. it was the “Worldsoul” the uniting principle of all rational forces working in the world.
சப்த பிரம்மம் இந்த உலகின் ஆன்மா என்று சொல்லி இருக்கிறார் ...
கிரேக்க தத்துவ ஞானிகள் பலர் இதை பற்றி நிறைய பேசி இருக்கிறார்கள் அது நமக்கு இப்போது தேவை இல்லை .. (பாவம் அவர்களுக்கு நம்மை போன்று பிரயோகம் .. usage of manthras பற்றிய அறிவு இல்லை !!)

மூன்று உலகம் பற்றி பார்த்தோம் .. எப்படி இந்த உலகத்தை பரம புருஷன் சப்த பிரம்மம் மூலமாக உருவாக்கினான் என்று கண்டோம் ..

எப்படி பரமபுருஷன் ஒரு வாக்கினால் உலகை உண்டாக்கினானோ அதே வாக்கை கொண்டு நாமும் இந்த உலகை விட்டு நீங்கி அந்த பரமபுருஷனை அடைய முடியும் என்று கா'னங்கள் மூலம் செய்து காட்டியவர்கள் .. திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ..

அட எனக்கு அதெல்லாம் இருக்கா என்ன .. இறைவனை அடையும் அவா?? என்ற கேள்விக்கு பதில் ...ஏதாவது பக்திப்பாடலை கேட்டால் கண்களில் உங்களை அறியாமல் கண்ணீர் வருமானால் .. உங்களால் நாதப்ரிம்மம் ஆகிய அந்த இறைவனை அடைய தயார் ஆகி விட்டீர் என்று தெரிந்து கொள்ளலாம் !!

நம்மால் பெருவாரியாக அறியப்படும் மந்திரம் என்பது சூக்ஷும வாக்குகளே !! இவைகளே நம்மையும் தேவர்களையும் இணைப்பது ... அதை பற்றி வரும் வாரங்களில் பார்ப்போம் ..

1 comment: